• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2020-இல் மூவாயிரம் கோடி டாலர் ஏற்றுமதி – இலங்கை நம்பிக்கை
  2016-05-06 10:35:19  cri எழுத்தின் அளவு:  A A A   
2020ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்புத் தொகை சுமார் மூவாயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டும் என்று நம்புவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஏற்றுமதியை அதிகரிப்பதுதான் நாட்டின் பொருளாதாரத்துக்கும், பிராந்திய அளவில் நிலவும் போட்டியை சமாளிப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரும் அக்டோபர் மாதம், உலக ஏற்றுமதி வளர்ச்சி மன்றத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய வர்த்தக அமைச்சர் சமரவிக்ரமா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது

2015ஆண் ஆண்டில் இலங்கையின் சரக்கு மற்றும் சேவைப்பொருள்களின் ஏற்றுமதித் தொகை 1700 கோடி அமெரிக்க டாலர். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வெறும் 20 விழுக்காடு மட்டுமே. மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் மொத்த ஏற்றுமதித் தொகையின் அளவானது அந்நாடுகளின் ஜிடிபிகளில் 70 சதவீத்த்துக்கும் அதிகமாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம், பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் உள்ள அரசின் நடவடிக்கைகள் இலங்கையின் வரத்தக ஏற்றுமதியை அதிகரித்தும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040