• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத்தியப் பிரதேச கும்பமேளாவில் விபத்து – 6 யாத்ரிகர்கள் சாவு
  2016-05-06 10:36:10  cri எழுத்தின் அளவு:  A A A   
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயின் மாவட்டத்தில் சிம்ஹஸ்தா கும்ப மேளாவில், கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 யாத்ரிகர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை பெய்த கடும் மழை மற்றும் புயலினால் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கூடாரம் சரிந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்கு நடைபெறும் சிம்ஹஸ்தா கும்பமேளா விழா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கியது. இக்கும்பமேளாவில் கலந்து கொண்டு நதியில் மூழ்கினால் பாவங்கள் கரைந்து போகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு மட்டும் சுமார் 5 கோடி பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்பர் என்று மத்தியப் பிரதேச அரசு மதிப்பிட்டுள்ளது..

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040