வடமேற்கு சிரியாவின் கடலோரப் பிரதேசத்தில் 23ஆம் நாள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.
ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் அதே நாள் வெளியிட்ட அறிக்கையில் இப்பயங்கரவாத சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தார். சிரியாவின் பல்வேறு தரப்புகள் போர் நிறுத்த உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அப்பாவி மக்களின் மீது தாக்குதல் தொடுக்கப்பதை நிறுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
ஐ.எஸ் அமைப்பு இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்தது.