சிரியா பிரச்சினை பற்றி ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கேர்ரியும் 23ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.
ஆயுததாரிகளும் ஆயுதங்களும் துருக்கி எல்லையைக் கடந்து செல்வது, சிரியா போர் நிறுத்த உடன்படிக்கையில் சேராத சட்ட விரோதமான இராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் மீது இரு நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரஷியாவின் முன்மொழிவு ஆகியவை பற்றி இருவரும் விவாதித்தனர்.
சிரியா அமைதிக்காக நடைபெறும் ஜெனீவா பேச்சுவார்த்தையின் தேதி பற்றி இப்பிரச்சினை தொடர்பான பல்வேறு தரப்புகளுக்குமிடையில் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.