• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியா, ஈரான், ஆப்கன் இடையே ஒப்பந்தம்
  2016-05-24 11:08:44  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரானின் சாபாஹர் துறைமுகத்தின் வளர்ச்சிக்காக ஈரான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மூன்று தரப்பிலான ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று நாடுகளையும் இணைக்கும் போக்குவரத்து இடைவழியாக இத்துறைமுகம் பயன்படும்

ஈரான் அரசுத் தலைவர் ஹசன் ரௌஹானி, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ஆப்கன் அரசுத் தலைவர் அஷ்ரப் கானி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம். எதிர்காலத்தில் மேலும் பல நாடுகள் இதில் இணையும் என்று ரௌஹானி தெரிவித்துள்ளார்.

சாபாஹர் துறைமுகத்தின் வழியாக, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய, காக்கேசியா நாடுகளிடையே இந்திய எளிதாகப் போக்குவரத்து மேற்கொள்ளும். மேலும், பாகிஸ்தானை கடந்து செல்லாமல் ஆப்கனுக்கு சரக்குகளை இந்தியா கொண்டு செல்வதற்கு சாபாஹர் இடைவழி முக்கியம் ஆகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040