பாகிஸ்தான் தலைமை அமைச்சரின் வெளியுறவு விவகாரத்துறையின் சிறப்பு உதவியாளர் சையது டாரிக் பதேமி, அமெரிக்க தூதர் டேவி ஹேலை அழைத்து, ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இத்தாக்குதல் பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயலாகும். உறுப்பு நாடுகளின் எல்லை கட்டுப்பாடு தொடர்பான ஐ.நா.வின் உத்தரவாத்த்தை மீறுவதாகும் என்று பதேமி சுட்டிக்காட்டியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.