மே திங்கள் முதல் கடும் காற்று மற்றும் புயல் மழையால் இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கம் மற்றும் நிலச் சரிவு ஏற்பட்டது. சீன வணிக அமைச்சகமும் தொடர்புடைய வாரியங்களும் சேர்ந்து இலங்கைக்கு மனித நேய உதவித் திட்டத்தை வகுத்து வருகின்றன. இயற்கை சீற்றத்தின் நிலைமை, இலங்கையின் கோரிக்கை ஆகியவற்றுக்கிணங்க, வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப்பணியில் சீனா இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கும்.