• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
13ஆவது ஆசிய ஊடகங்களின் உச்சி மாநாடு துவக்கம்
  2016-05-25 10:07:44  cri எழுத்தின் அளவு:  A A A   
13ஆவது ஆசிய ஊடகங்களின் உச்சி மாநாடு 24ஆம் நாள் தென் கொரியாவின் இன்சோன் நகரில் துவங்கியது. 49 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான அரசு அதிகாரிகள், மூத்த ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் இம்மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கிமூன் இம்மாநாட்டுக்கு வழங்கிய வாழ்த்து உரையில், மனித நேய உதவிக்கான தேவை அதிகரிப்பு, இயற்கை சீற்றம், காலநிலை மாற்றம் முதலியவை தற்போதைய உலகில் ஏற்பட்டுள்ள முக்கிய சவால்களாகும். தொடரவல்ல வளர்ச்சிக்கான ஐ.நாவின் 2030 நிகழ்ச்சி நிரலில் அவற்றுக்கான தீர்வு முறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டு ஆசிய ஊடகங்களின் உச்சி மாநாடு சீனாவின் சிங்தாவ் நகரில் நடைபெறும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040