ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் மே 24ஆம் நாள் நிறைவடைந்த பிறகு, தென் சீனக் கடல் பிரச்சினை குறித்த ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தென் சீனக் கடல் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதியையும் நிலைப்புத்தன்மையையும் நிலைநிறுத்தி வலுப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. தென் சீனக் கடலின் அமைதியை பேணிக்காப்பதற்காக சீன அரசின் முயற்சிகளை அறிந்து கொண்டு அதை ஆதரிப்பதாகவும் இந்த உறுப்பு நாடுகள் கருதுகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.