அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒமாபா 24ஆம் நாள் வியட்நாம் நாட்டில் உரை நிகழ்த்திய போது தென் சீனக் கடல் பற்றி குறிப்பிட்டார். அவரது கூற்றுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் அதேநாள் மறுமொழி அளித்தார். இப்பிரதேசத்திலுள்ள நாடுகளின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிகாக்கும் முயற்சிக்கு தொலைவிலுள்ள நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். இப்பிரதேசத்தின் விதிகளைச் சீர்குலைக்கவும், அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையைக் குழப்பமாக்கவும் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா குறிப்பிட்ட பயண சுந்திரம், சர்வதேச சட்டத்துக்கு ஏற்கும் வகையிலானது என்றால் சீனா அதனை வரவேற்கிறது. ஆனால், அமெரிக்க போர் விமானம் மற்றும் கப்பல்கள் சென்று வருவதற்கான சுதந்திரம் என்றால், சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்று ஹுவா சுன்யிங் குறிப்பிட்டார்.