• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்
  2016-05-29 17:05:14  cri எழுத்தின் அளவு:  A A A   
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் பாலின் விலையை நாளை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தவுள்ளன. தனியார் பால் நிறுவனங்களின் இச்செயலுக்கு தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாட்டில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் வாகன எரிபொருள் விலை உயராத போது தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் பாலின் விலையையும் பால் சார் பொருட்களான தயிர் உள்ளிட்டவற்றின் விலையையும் உயர்த்தியுள்ளன. மக்களைப் பாதிக்கும் வகையில் விலை உயர்வினை அறிவித்துள்ள தனியார் பால் விற்பனை நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு அந்த நிறுவனங்கள் உடனடியாக விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040