ஹமீட் பேசுகையில், வங்காளதேசம் சீனாவுடன் இணைந்து, பிரதேசத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். இரு படைகளிடையில் சிறந்த ஒத்துழைப்பை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
சாங்வாங்ஜுவான் கூறுகையில், சீன இராணுவ படை, வங்காளதேச படையுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களை உணர்வுபூர்வமாகச் செயல்படுத்த விரும்புகிறது. நட்பார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வலிமையான ஆதரவு மற்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினார். அத்துடன், தென் சீன கடல் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை அவர் விளக்கிக் கூறினார்.