சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க மாநாடு, சீன அறிவியல் கழகத்தின் 18வது மூத்த அறிஞர்கள் மாநாடு, சீனப் பொறியியல் கழகத்தின் 13வது மூத்தி அறிஞர்கள் மாநாடு, சீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கத்தின் 9வது தேசிய மாநாடு ஆகியவை 30ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் இதில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
அறிவியல் தொழில் நுட்பம் வலிமையாக வளர்ந்து வருவதால், தேசிய மறுமலச்சி நன்றாக நனவாக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.