ஜுன் 21ஆம் நாள், சர்வதேச யோகா தினாகும். அதைக் கொண்டாடும் வகையில், பெய்ஜிங்கின் பிங்கூ மாவட்டத்திலுள்ள ஸிலின்ஷியா சுற்றுலா தலத்தில் நேற்று திங்கள்கிழமை சிறப்பான யோகா நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. அங்கு தரையில் இருந்து 700 மீட்டர் உயரத்தில் உள்ள காட்சியைக் கண்டுரசிக்கும் அரங்கத்தில், 150 யோகா ஆர்வலர்கள் யோகா செய்துள்ளனர்.