ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினமாகும். இதை முன்னிட்டு, பெய்ஜிங்கின் சோயாங் சாவ்யாங் பூங்காவில் சிறப்பான யோகா உடற்பயிற்சி நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இந்நடவடிக்கையைச் சீனாவுக்கான இந்தியத் தூதரகம், யோகா டைஜஸ்ட் மற்றும் யோகி யோகா ஆகியவை கூட்டாக நடத்தின. 500க்கும் அதிகமான யோகா ஆர்வலர்கள் யோகா பயிற்சியைக் கூட்டாகச் செய்து யோகாவின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து கொண்டனர்.