சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், துர்க்மேனிஸ்தான் அரசுத் தலைவர் குருபான்ருலி பெர்டி மு அமெடோவுடன் சந்தித்துரையாடினார்.
இரு நாட்டுறவில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. துர்க்மேனிஸ்தானுடன் இணைந்து பாடுபட்டு, பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்பு நிலையை உயர்த்தி, இரு தரப்புகளின் நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஆழமாக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.