ச்சியாங்சூ மாநிலத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்புதவி பணிகளை பன்முகங்களிலும் மேற்கொண்டு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை இயன்ற அளவில் குறைக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் உத்தரவிட்டார்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் மற்றும் தலைமையமைச்சர் லீ கெச்சியாங்கின் கோரிக்கையின் படி, சீனப் பொதுத்துறை அமைச்சகம் உள்பட்ட பல வாரியங்கள் இயற்கை இன்னல்களால் பாதிக்கப்பட்ட வட்டாரங்களுக்கு சென்று, மீட்பு உதவி பணிகளை மேற்கொண்டுள்ளன.