பிரிக்ஸ் நாடுகளின் உச்ச நிலை தணிக்கை வாரியத் தலைவர்களின் முதலாவது கூட்டம் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை தணிக்கை எப்படி முன்னேற்ற முடியும் என்ற தலைப்பில், பிரிக்ஸ் நாடுகளின் முதன்மை தணிக்கையாளர்கள் விவாதம் நடத்தினர். கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தில், பல்வேறு நாடுகளின் உச்ச நிலை தணிக்கை வாரியங்களும் நாட்டின் நிர்வாகத்தில் அடிப்படை மற்றும் முக்கியமான உத்தரவாத பங்கினை வெளிக்கொணர வேண்டும் என்றும், நாட்டின் ஆட்சி முறையை மேம்படுத்தி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் தணிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.