• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா. பாதுகாப்பவையின் கண்டனத்துக்கு வட கொரியா மறுப்பு
  2016-06-25 16:12:04  cri எழுத்தின் அளவு:  A A A   
எறிவிசை ஏவுகணையை வட கொரியா மீண்டும் செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பவை வெளியிட்ட அறிக்கையை வட கொரியா ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 24ஆம் நாள் தெரிவித்தார்.

வட கொரியா சோதனை முறையில் எறிவிசை ராக்கெட் செலுத்திய செயல், அமெரிக்கா தலைமையிலான எதிர் சக்தியின் அச்சுறுத்தலைக் கையாளும் வகையில் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையாகும். வட கொரியாவை இடைவிடாமல் இராணுவ ஆற்றலுடன் அச்சுறுத்தும் அமெரிக்காதான், கொரிய தீபகற்பத்தின் பதற்ற நிலைக்கு காரணமாகும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040