சீன-ரஷிய உறவுக்கு மேலும் அருமையான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவதென்ற உரையில், இருநாடுகளும் இணைந்து உடன்படிக்கையில் உறுதி செய்யப்பட்ட திசையை நோக்கி முன்னேறி, அருமையான எதிர்காலத்தை இணைந்து உருவாக்க வேண்டும். நமது எதிர்கால தலைமுறையினர்கள் எப்போதுமே அமைதி மற்றும் நட்பார்ந்த நிலையில் வாழச் செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.
புதின் பேசுகையில், இருநாட்டுறவு இருநாட்டு மக்களின் நலன்களுக்குப் பொருந்துவதுடன், உலக மற்றும் பிரதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் துணைபுரியும். சீனாவுடன் பல்வேறு நிலையிலான தொடர்பையும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த ரஷியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
இருநாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 400 பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.