• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தொலைபேசி மூலம் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனி தலைவரின் பேச்சுவார்த்தை
  2016-06-27 14:57:55  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரெஞ்சு அரசுத் தலைவர் பிரான்சுவா ஓலாந்தே, ஜெர்மன் தலைமையமைச்சர் ஏஞ்சலா மெர்கல் அம்மையார் ஆகியோர் 26ஆம் நாளிரவு தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக அறிவித்த பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு முன்மொழிவு அளித்து, முன்னுரிமையுடன் கூடிய உகந்த விபரங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

உள்ளூர் நேரப்படி 27ஆம் நாள் முற்பகல், ஓலந்தே அரசுத் தலைவர் மாளிகையில், ஐரோப்பிய ஒன்றிய பேரவைத் தலைவர் துஸ்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அன்று பிற்பகல் ஓலந்தே ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்குச் சென்று, ஜெர்மனி தலைமையமைச்சர் மெர்கல் அம்மையார், இத்தாலி தலைமையமைச்சர் ரேன்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு, வரும் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டுக்கு ஆயத்தம் செய்வதற்காகும் என்று தெரிய வருகின்றது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040