இந்திய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 28ஆம் நாள் உயர் வேக இருப்புப்பாதை மூலம் சீனாவின் தியன் ச்சினிலிருந்து பெய்ஜிங்கிற்கு பயணம் செய்தார். இந்த உயர்வேக தொடர்வண்டி சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 31 நிமிடங்களில் கடந்தது.
சீன இருப்புப்பாதை நிபுணர்களின் உதவியுடன் விசாக்ப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகிய கடலோர பிரதேசங்களுக்கிடையிலும் சென்னைக்குச் செல்லும் வழியிலும் உயர்வேக இருப்புப்பாதையைக் கட்டியமைப்பதற்கான ஆய்வு அறிக்கையை தயாரிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் இருப்புப்பாதை கட்டுமானத் திட்டத்தை பரவலாக்க சந்திரபாபு நாயுடு முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.