கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி, ரஷிய ஜெட் விமானத்தை துருக்கியில் சுடப்பட்டு வீழ்ந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், துருக்கி அரசுத் தலைவர் எர்டோகனுடன், ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, துருக்கியுடனான உறவை புதுப்பிக்க ரஷியா தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் தலைவர்களும் அறிவுப்பூர்வமான முடிவை எடுத்துள்ளனர். இதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவை அளிக்கிறது. இந்த முடிவினால் இப்பிரதேசத்தில் நீடித்து வந்த பதற்றமான நிலைமை குறையும். அதேபோல், பிரதேச மற்றும் சர்வதேச அளவிலான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கும் இது துணைபுரியும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.