சர்வதேச குடிபெயர்வு அமைப்பில் சீனா சேர்வதை ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் ஜூன் 30ஆம் நாள் தனது செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றார்.
சீனா இவ்வமைப்புக்கு மாபெரும் பங்காற்றும் என நம்புவதாக பான் கீ மூன் இவ்வறிக்கையில் தெரிவித்தார். தற்போது, குடியேறுவோர் மற்றும் அகதிகள் பிரச்சினை முன்பை விட மேலதிகக் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தீர்க்கமான காலக்கட்டத்தில், சீனா இவ்வமைப்பின் உறுப்பு நாடாக மாறுவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.
ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச குடிபெயர்வு அமைப்பின் தலைமையகம் 30ஆம் நாள் சிறப்புச் செயற்குழு கூட்டத்தை நடத்தி, சீனா, சாலமன் தீவுகள், தூவலு ஆகிய நாடுகள் இவ்வமைப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை அங்கீகரிகத்தது. இம்மூன்று நாடுகளின் வரவினால் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது.