இது குறித்து, பொருளியலாளரும் சீன அரசவை ஆலோசகருமான தாங் மின் கூறியதாவது
சர்வதேசப் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமாகி வரும் பின்னணியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன் சீனப் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு முற்பாதியில் பொருளாதார அமைப்புமுறை தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது என்று எவிஸ் செக்கியூரிட்டிஸ் நிறுவனத்தின் முதன்மை பொருளியலாளர் சூ வேஹுங் சுட்டிக்காட்டினார். முழு உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் பின்னணியில், பல்வேறு நாடுகளுக்கிடையில் போட்டியிடும் போது இதன் பயன் மிக தெளிவாக உள்ளது. சீனா அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடு. குறிப்பாக நடுத்தர வகுப்பினர்களின் நுகர்வு சுறுசுறுப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆனால் முதலீட்டு துறையின் வளர்ச்சி மக்களுக்கு மனநிறைவை தர முடியாது. எங்களுக்குப் பேட்டியளித்த பல பொருளியலாளர்கள், அரசுச் சாரா முதலீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இதனிடையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு, பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியைத் தூண்டி, இவ்வாண்டின் வளர்ச்சி இலக்கை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
சீனாவில் நுகர்வு சீராக அதிகரித்து வருகிறது. முதலீட்டுத் துறையில் உள்ளார்ந்த ஆற்றல் அதிகம். மேலும், சீனாவின் மிக அதிக வங்கி சேமிப்புத் தொகை மற்றும் அன்னிய செலாவணி, இதர நாடுகளுக்கு கிடைக்காத மேம்பாடுகளாகும் என்றும், இவ்வாண்டு சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு 6.5 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் புகழ்பெற்ற பொருளியலாளர் லீன் யீஃபூ கருத்து தெரிவித்தார்.