பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி பங்கு பத்திரச் சந்தையில் முதல் தொகுதி ரென் மின் பி கடன் தொகையை 18ஆம் நாள் வெளியிட்டது. அதன் மொத்த தொகை 300 கோடிய யுவானாகும். கால அட்டவணை 5 ஆண்டுகளாகும்.
இத்தொகுதி கடன் பாண்டா கடன் என்று அழைக்கப்படுகிறது. பாண்டா கடன் என்பது சீனாவில் வங்கிகளுக்கிடையே பங்கு பத்திரச் சந்தையில் ரென் மின் பி மூலம் மதிப்பிடப்படும் கடனாகும். பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி 2015ஆம் ஆண்டு ஜுலை 3ஆம் நாள் நிறுவப்பட்டது. அதன் தலைமையகம் ஷாங்காய் மாநகரில் உள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 உறுப்பு நாடுகள் தலா 20 விழுக்காட்டு நிதி என்ற அளவில் இவ்வங்கியின் பங்கிற்குப் பொறுப்பேற்றன. பாண்டா கடன் பற்றி சீனச் சர்வதேசப் பொருளாதாரப் பரிமாற்ற மையத்தின் ஆய்வாளர் வாங் ஜுன் கூறியதாவது
300 கோடி ரென் மின் பி யுவான் என்பது, அதிகமான பணமில்லை. ஆனால், சீனாவில் பங்கு பத்திரங்களின் வகைகளை அதிகரிப்பதற்கும், பன்னாட்டு வளர்ச்சி நிறுவனங்கள் ரென் மின் பி மூலம் நிதி திரட்டுவதற்கும், சீனப் பங்கு பத்திரச் சந்தையின் வெளிநாட்டுத் திறப்புக்கும் இது துணை புரியும் என்று அவர் கூறினார்.
பிரிக்ஸ் நாடுகள், இதர புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கும், தொடரவல்ல வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் நிதி திரட்டுவது பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் குறிக்கோளாகும். புதிதாக வெளியான பாண்டா கடன் தொகை, சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய திட்டப்பணிகளுக்கு வழங்கப்படும். பசுமையான தொடரவல்ல வளர்ச்சிக் கருத்தை இது வெளிப்படுத்தியதாக வாங் சுன் சுட்டிக்காட்டினார்.
தற்போது சீனாவில் பங்கு பத்திர சந்தையின் அளவு சுமார் 57 இலட்சம் கோடி யுவானாகும். இதில் பாண்டா கடன் தொகை சுமார் 2800 கோடி யுவானாகும்.
ரென் மின் பியின் சர்வதேச மயமாக்கம் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக, எஸ்டிஆர் அமைப்புமுறையில் இது சேர்க்கப்பட்ட பின், சீனக் கடன் சந்தையின் ஈர்ப்பு ஆற்றலும் வலுவாகி வருகின்றது. சீனாவின் சந்தை அளவும் சீரான நிதிச் சூழ்நிலையும் வெளிநாடுகளுக்கு ஈர்ப்பாற்றல் மிக்கது என்று வாங் சுன் கருத்து தெரிவித்தார்.
மேலும் பாண்டா கடனை வெளியிடுவது, நிதிச் சந்தையின் வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதற்கான முக்கிய காலடியாகும் என்று பல நிதித் துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.