5 நாட்கள் நீடித்த 14ஆவது ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கூட்டம் 22ஆம் நாளிரவு கென்யாவின் தலைநகரான நைரோபியில் முடிவடைந்தது. இக்கூட்டத்தில் நைரோபி அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நைரோபி அறிக்கையில், சர்வதேச சமூகம் தொடரவல்ல வளர்ச்சியின் அரசியல் கருத்தொற்றுமையை தொடர்ந்து நிறைவேற்றி, வர்த்தகத்தின் உலகமயமாக்கத்தில் வளரும் நாட்டு மக்களுக்கு இன்றியமையாத உதவியை வழங்க வேண்டும் என்று ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கூட்டத்தின் பொதுச் செயலாளர் முசிஷா சிதுயி கூறினார்.