49ஆவது ஆசியான் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 24ஆம் நாள் லாவோஸின் தலைநகரான வியண்டியனில் துவங்கியது. ஆசியான் 10 நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், ஆசியான் பொதுச் செயலாளர், ஆசியான் பல்வேறு நாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிக் குழுகள் துவக்க விழாவில் கலந்துகொண்டுள்ளனர். தற்போது, பிரதேசங்களிலும் உலகிலும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பல பாதுகாப்பு அறை கூவல்களை எதிர்நோக்குகின்றன. பிரதேச ஒழங்குமுறையில் ஆசியானின் தலைமை பங்கை வலுப்படுத்த வேண்டும் என்று ஆசியான் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான லாவோஸ் தலைமையமைச்சர் துங்லான் சிசுலித் தெரிவித்தார்.