2016ஆம் ஆண்டுக்கான 20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் மூன்றாவது கூட்டம் 23, 24 ஆகிய நாட்களில் செங்தூ நகரில் நடைபெற்றது. 9 முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. நம்பிக்கை மற்றும் வளர்ச்சி அதிகரிப்புக்காக மேலும் அதிகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு தரப்புகள் உடன்பட்டுள்ளன.
உலகப் பொருளாதார நிலைமை, சர்வதேச நிதி கட்டமைப்பு, முதலீடு மற்றும் அடிப்படை வசதி, பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதி திரட்டல் உள்ளிட்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மேலும், இத்துறைகளில் பெறப்பட்ட முக்கிய சாதனைகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டம் 20 நாடுகள் குழுவின் ஹாங்சோ உச்சி மாநாட்டுக்கு ஆயத்தம் செய்துள்ளது.