தென் சீனக் கடல் பிரச்சினையிலுள்ள பல்வேறு தரப்புகளின் செயல்பாடுகள் என அறிவிப்பின் முழுமையான மற்றும் பயனுள்ள நடைமுறையாக்கம் குறித்து, ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் திங்கட்கிழமை கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனார். ஜுலை 25ஆம் நாள் லாவோஸ் தலைநகர் வயின்தியான்னில் இந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையே சந்திப்பு நடைபெற்ற பிறகு, இந்த கூட்டறிக்கை வெளியானது.
ஐ.நா. கடல் ஒப்பந்தம் உள்பட பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் சர்வதேச சட்டங்களின்படி, ஆயுத ஆற்றலுக்குப் பதிலாக, நட்பார்ந்த கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை மூலமும் அமைதியான முறையிலும் நேரடி தொடர்புடைய நாடுகள் நில உரிமை மற்றும் ஆட்சி அதிகாரம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகள் வாக்குறுதி அளிப்பது முதலான மொத்தம் 6 அறிவிப்புகள் இந்த கூட்டறிக்கையில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன.