சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்புத் துறை உதவியாளர் சுசான் ரைஸ் அம்மையாரை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.
இரு தரப்புகளுக்கிடையே நம்பிக்கையை வலுப்படுத்த சீனாவும் அமெரிக்காவும் முயற்சி எடுக்க வேண்டும். கருத்துவேற்றுமைகளை விட, இரு நாடுகளுக்கிடையேயான கருத்தொற்றுமை அதிகம். ஒத்துழைக்க கூடிய மற்றும் ஒத்துழைக்க வேண்டிய துறைகள் அதிகம். பயனுள்ள ஒத்துழைப்பு, சீன-அமெரிக்க உறவின் அடிப்படையாகும். கருத்துவேற்றுமையை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தி, தத்தமது மைய நலன்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சந்திப்பின்போது தெரிவித்தார்.
ஜி20 உச்சி மாநாடு பற்றி ஷிச்சின்பிங் பேசுகையில்
ஜி20 அமைப்பு, உலகின் பொருளாதார ஆட்சியின் முக்கிய அரங்கமாகும். உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும், தற்போதைய நிலையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சாதனைகளை பெறும் வகையிலும், உலக பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியைக் கொண்டு வரும் வகையிலும், இரு நாடுகளும் முன்னெடுக்க வேண்டும். உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர் பாராக் ஒபாமாவை சந்திப்பதை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.