• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் கூட்டறிக்கை
  2016-07-26 10:15:14  cri எழுத்தின் அளவு:  A A A   
லாவோஸ் தலைநகர் வியண்டியனில் நடைபெற்ற 49ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் 25ஆம் நாள் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. சட்டத்தின்படி ஆட்சி மற்றும் மக்களை அடிப்படையாக கொண்ட பொது சமூகத்தை உருவாக்கும் வகையில், 2025ஆம் ஆண்டுக்கான ஆசியானின் பொது நோக்கத்தை ஆசியான் நாடுகள் அனைத்து நிலைகளிலும் பயனுள்ள முறையிலும் செயல்படுத்தும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான ஒத்துழைப்பு மற்றும் உறவின் வளர்ச்சி குறித்து மனநிறைவு அடைந்துள்ளதாகவும், தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து, பல்வேறு தரப்புகளின் செயல்பாட்டு அறிக்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040