27ஆவது அரபு லீக்கின் உச்சி மாநாடு 25ஆம் நாள் மாவ்லிதானியாவின் தலைநகர் நுவாக்ட்சொட்டில் துவங்கியது. 21 உறுப்பு நாடுகளின் அதிபர்களும் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பயங்கரவாதத்தைக் கூட்டாக ஒடுக்குவது உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதம் நடத்த உள்ளனர்.
அரபு லீக்கின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் மாவ்லிதானியாவின் அரசுத் தலைவர் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது, உறுப்பு நாடுகள் முயற்சியுடன் இணைந்து பணியாற்றி, பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.