இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், பிற நாடுகளில் உள்ள தூதரகங்கள் தொடர்பான கொள்கைகள் இதுவும் ஒன்றாகும். நிலைமையைக் கருத்திக் கொண்டு, அனைத்து நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது இயல்பே என்று தெரிவித்தார்.
அரசின் மறு உத்தரவு வரும்வரை பணியாள்ரகள் இதனைக் கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த முடிவு, 2015ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டது என்றும், அதிகாரிகளுக்கு உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்றில், "பாகிஸ்தானில் பணியாற்றும் தூதரக பணியாளர்கள், தங்களது குழந்தைகளுடன் தங்கியிருக்க முடியாது என்பதை இந்த உத்தரவு உணர்த்துகிறது. பாகிஸ்தானில் பணியாற்ற விரும்புவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.