இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி, பாகிஸ்தானுடான ஈரானின் உறவை சீர்குலைக்கும் தீவிரவாதிகளின் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஷாம்கானி கூறியதாக டஸ்நீம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜன்ஜூவாவுடன் ஷாம்கானி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்லாமிய நாடுகளிடையே பகைமையைத் தூண்டும் வகையில் வெளிநாட்டு சக்திகள் செயல்படுகின்றன என்று நசீர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள உள்ள பலுசிஸ்தான் மற்றும் சிஸ்டான் மாநிலங்களில் 2 டன்னுக்கும் அதிகமான ஓபியம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.