• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங் யீயின் உரை
  2016-07-27 09:06:22  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, 26ஆம் நாள் லாவோஸ் தலைநதர் வியண்டியனில் நடைபெற்ற 6ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வாங் யீ பேசுகையில், இவ்வாண்டு, கிழக்காசிய உச்சி மாநாட்டின் 2ஆவது பத்தாண்டுகாலத்தின் துவக்கமாகும். புதிய துவக்கப் புள்ளியிலிருந்து புதிய இலக்கை நோக்கி முன்னேறும் போது, சில கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சீனா கருதுவதாகத் தெரிவித்தார்.

முதலாவதாக, திட்டமிடப்பட்ட வளர்ச்சி திசையை பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு மீது கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவதாக, பாதுகாப்புத் துறையிலான பாரம்பரியமற்ற சவால்களை ஒத்துழைப்பு மூலம் சமாளிக்க வேண்டும். நான்காவதாக, பிரதேச பாதுகாப்பு கட்டுக்கோப்பை முழுமையாக்க வேண்டும் என்று வாங் யீ குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040