விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை ராணுவத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று ராணுவ செய்திப் பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தீவிரவாதம் அதிகரித்து வருவது குறித்து இலங்கை ராணுவத் தளபதி மிலிந்தா பெரிஸ் கூறுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தீவிரவாத்தை எதிர்கொள்வதற்கு புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.