ஈராக் மற்றும் சிரியாவில் கடந்த ஆண்டு ஜுலை 28ஆம் நாள் முதல் இவ்வாண்டு ஏப்ரல் 29ஆம் நாள் வரை, அமெரிக்கா மேற்கொண்ட வான்தாக்குதல்களில் 14 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமுற்றார் என்று அமெரிக்க மத்திய ஆணையம் 28ஆம் நாள் தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்களின் உயிரிழப்பை உண்டாக்கிய சம்பவங்கள் அமெரிக்காவின் 6 வான்தாக்குதல் நடவடிக்கைகளில் ஏற்பட்டன என்று அமெரிக்க மத்திய ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளை மாளிக்கை ஜுலை தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2009 முதல் 2015ஆம் ஆண்டு வரை, பாகிஸ்தான், ஏமன், லிபியா, சோமாலியா உள்ளிட்ட பிரதேசங்களில் அமெரிக்கா தொடுத்த வான்தாக்குதல்களில் 64 முதல் 116 வரையான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த எண்ணிக்கை உண்மையான உயிரிழப்பை விட குறைவு என்று சில தனியார் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.