துருக்கியின் உச்ச நிலை இராணுவ ஆணையத்தின் கூட்டம் 28ஆம் நாள் தலைமை அமைச்சர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் வெளியிடப்பட்ட முடிவின்படி, அந்நாட்டின் முப்படை தளபதிகள் குழுவின் மையத் தலைவர்கள் மாற்றப்படவில்லை.
துருக்கி அரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் 28ஆம் தேதி இரவு செய்தியாளரிடம் பேசுகையில், ஆயுதப்படையின் தளபதிகள் குழுவின் தலைவர், முப்படையின் ஆணையர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் இருப்பர் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த 15ஆம் நாள் தோல்வியடைந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பின் பாதிப்பினால், இக்கூட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டத்தின் காலம் திட்டமிடப்பட்ட 3 நாட்களிலிருந்து 1 நாளாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.