காஷ்மீரிலுள்ள லடாக் பகுதியில் இந்தியா கட்டுமானத்தை வலுப்படுத்தியது பற்றிய செய்திக் குறித்து, சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங்யூஜுன் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகளாகவும், கூட்டாளிகளாகவும் உள்ளது. எதிரிகள் போட்டியாளர்கள் அல்ல என்று அவர் கூறினார். எல்லைப் பிரச்சினைகளில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள பொது கருத்துக்களை இரு தரப்பும் தொடர்ந்து செயல்படுத்தி, இரு நாட்டு எல்லைப் பகுதியில் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், இரு நாடுகள் எட்டியுள்ள தொடர்புடைய விதிகளை சீன எல்லைக் காவற்படைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றி, எல்லைப் பகுதியில் சீனாவால் கட்டுப்பாட்டிலுள்ள இடத்தில் தங்கியிருந்து வருகின்றன. அவை, சீன-இந்திய எல்லைப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க பாடுபட்டு வருகிறது என்று யாங்யூஜுன் தெரிவித்தார்.