6ஆம் நாள் திபெத் மின்னாற்றல் நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ஜுலை திங்கள் இறுதிவரை, திபெத்தில் மின்சாரத்தின் பயன்பாட்டு அளவு 5 கோடியே 12 இலட்சத்து 40 ஆயிரம் கிலோவாட்டை எட்டியுள்ளது. 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதிக் கட்டத்தில், சுமார் ஒரு லட்சத்து 77 ஆயிரம் டன் நிலக்கரி சிக்கனப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திபெத்தில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரத் திட்டப்பணி, மாசுப் பொருட்களின் வெளியேற்றத்தைக் குறைத்து, உயிரினச் சூழல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.