• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் மின்சாரத் திட்டப்பணி
  2016-08-07 15:13:39  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத்தில் மின்சாரத் திட்டப்பணி அண்மையில் நிங்சி நகராட்சிக் கட்டிடம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களில் இயங்க தொடங்கியுள்ளது. தொழில் நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து முன்னேற்றும் இத்திட்டப்பணி பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நிலக்கரிக்குப் பதிலாக மின்னாற்றலைப் பயன்படுத்துவது திபெத்தில் உயிரினச் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் இன்னொரு புதிய நடவடிக்கையாகும்.

6ஆம் நாள் திபெத் மின்னாற்றல் நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ஜுலை திங்கள் இறுதிவரை, திபெத்தில் மின்சாரத்தின் பயன்பாட்டு அளவு 5 கோடியே 12 இலட்சத்து 40 ஆயிரம் கிலோவாட்டை எட்டியுள்ளது. 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதிக் கட்டத்தில், சுமார் ஒரு லட்சத்து 77 ஆயிரம் டன் நிலக்கரி சிக்கனப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திபெத்தில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரத் திட்டப்பணி, மாசுப் பொருட்களின் வெளியேற்றத்தைக் குறைத்து, உயிரினச் சூழல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040