ஆகஸ்ட் 24ஆம் நாள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள 8ஆவது சீன-ஜப்பானிய-தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லு காங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேற்கூறிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சீன-ஜப்பானிய-தென் கொரிய ஒத்துழைப்பை மீளாய்வு செய்யும் அதே வேளையில், மூன்று நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்பு திசை பற்றியும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர் என்றும் லு காங் தெரிவித்தார்.