தனது பதவிக் காலத்தில், கியூபாவில் உள்ள குவன்டானாமோ சிறையை மூட அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஓபாமா இன்னமும் திட்டமிடுவதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
குவன்டானாமோ சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 15 கைதிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அமெரிக்கா அப்புறப்படுத்தியுள்ளது. பராக் ஓபாமா பதவி ஏற்ற பிறகு, குவன்டானாமோ சிறையில் உள்ள மிக அதிகமான கைதிகள் அப்புறப்படுத்தப்பட்ட நடவடிக்கை இதுவாகும். பராக் ஓபாமா இச்சிறையை மூட திட்டமிடுவதற்கான வலுவான அறிகுறியாக இது கருதப்படுகிறது என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் 15ஆம் நாள் தெரிவித்தது.