• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு கொள்வர்
  2016-08-23 16:31:47  cri எழுத்தின் அளவு:  A A A   
24ஆம் நாள் நடைபெறவுள்ள சீன-ஜப்பானிய-தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, சீன, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடக்கவுள்ளது. கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல் தொடர்பான உணர்வலை தன்மை வாய்ந்த பிரச்சினைகளை இரு தரப்பினரும் விவாதிக்கக்கூடும் என்று ஜப்பானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்திததொடர்பாளர் லு காங் 23ஆம் நாள் பேசுகையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜப்பானிய தரப்பினருடன் தொடர்பு கொள்ளும் போது, ஜப்பானிய தரப்புக்கு சீனாவின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பார். இரு நாட்டுறவு, சீரான பாதைக்குத் திரும்புவதை சீனாவுடன் இணைந்து கூட்டாக முன்னேற்றும் வகையில், ஜப்பான் பயன்தரும் முறையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் ஜப்பான் தரப்பிடம் கோரிக்கை விடுப்பார் என்று லு காங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040