பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய"பிரிக்ஸ்" அமைப்பின் முதலாவது திரைப்பட விழா, செப்டம்பர் 2 முதல் 6ஆம் நாள் வரை புது தில்லியில் நடைபெறவுள்ளது என்று இந்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்திய தலைமை அமைச்சர் நரேந்தி மோடி கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ரஷியாவில் பயணம் மேற்கொண்டபோது, பிரிக்ஸ் திரைப்பட விழாவை மோடி முன்மொழிந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.