சிரிய பிரச்சினை பற்றிய சீன அரசு சிறப்புத் தூதர்சியே சியௌ யான் 24, 25ஆம் நாள் கத்தாரில் பயணம் மேற்கொண்டு, கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியைச் சந்தித்துரையாடினார். சிரிய பிரச்சினை குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.
பயணத்தின் போது, அல் ஜசீராவின் தீபகற்ப ஆராய்ச்சி மையத்தின் சில நிபுணர்களுடன் செய் சோ யான் கலந்துரையாடல் மேற்கொண்டு, கத்தாரிலுள்ள சிரிய எதிர்ப்புகுழுவின் சில பிரதிநிதிகளுடன் தொடர்பு மேற்கொண்டு, சிரிய தொடர்புடைய தரப்புகள் மோதலை நிறுத்தி, பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்குப் பங்காற்றியுள்ளார்.