மனித நேய வாகனக் குழு அலெபோ நகருக்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அலெபோவுக்கு 48 மணி நேரம் போர் நிறுத்தத்தை வாரம்தோறும் செயல்படுத்துமாறு மீண்டும் வேண்டுக்கோள் விடுத்தார். சிரிய பிரச்சினை பற்றிய ஐ.நா சிறப்புத் தூதர் துமிஸ்துரா 25ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி 25ஆம் நாள் ஜெனீவாவிற்கு சென்றடைந்து, 26ஆம் நாள் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் சந்திப்பு நடத்தினார். சிரிய அரசியல் போக்கு மீண்டும் துவங்குவதற்கு இச்சந்திப்பு முக்கிய பங்காற்றும் என்று துமிஸ்துரா தெரிவித்தார்.