2020ஆம் ஆண்டு வரை, நுகர்வு பொருட்களின் வினியோகம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவையை அடிப்படையில் நிறைவு செய்ய வேண்டும் என்று சீனத் தேசிய தர நிர்ணய நிர்வாகத்தின் தலைவர் தியன் ஷிஹோங் 26ஆம் நாள் நடைபெற்ற அரசவையின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். முக்கிய துறைகளிலான நுகர்வு பொருட்களின் தரம் சர்வதேச முன்னேறிய நிலையை நெருங்க அல்லது எட்ட வேண்டும். இது தொடர்பான திட்ட வரைவு விரைவில் வெளியிடப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முக்கிய நுகர்வு பொருட்களுக்கான சர்வதேச தர நிர்ணயம் ஒரே நிலையில் இருக்கும் விகிதம் 95 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தப்பட வேண்டும். தேசிய சோதனையில் நுகர்வு பொருட்களின் தரம் குறிப்பிடப்பட்ட வரையறையில் 90 விழுக்காட்டுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டுள்ளன.