• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரைனின் கிழக்கில் போர் நிறுத்தம் வேண்டுகோள்
  2016-08-27 15:51:49  cri எழுத்தின் அளவு:  A A A   
புதிய கல்வி பருவத்துக்கு பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்கும் வகையில், உக்ரைன் கிழக்கு பகுதியின் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் செப்டம்பர் முதல் நாள் தொடங்கி கால வரம்பில்லாத போர் நிறுத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்று உக்ரைன் பிரச்சினைக்கான முத்தரப்பு தொடர்புக் குழு 26ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தது.

இக்குழுவின் வழக்கமான கூட்டம் 26ஆம் நாள் பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்றது. அதற்கு பின் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்பு பிரதிநிதி மார்டின் சாஜ்டிக் பேசுகையில், பல்வேறு தரப்புகளின் உச்ச நிலை துறையும் செய்தி ஊடகங்களும் போர் நிறுத்தம் தொடர்பான வேண்டுகோளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040