சீனாவின் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு ஒன்று, ஆகஸ்டு 24 முதல் 28ம் நாள் வரை தென்கொரியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது.
பயணத்தின்போது, கடந்த ஆண்டுகளில் திபெத்தின் பொருளாதாரம், சமூகம், உயிரின வாழ்க்கைச் சூழல், பண்பாடு முதலான துறைகளில் படைக்கப்பட்டுள்ள வளர்ச்சிச் சாதனைகளை இக்குழு அறிமுகம் செய்ததோடு, ஒன்றுக்கொன்று கவனம் செலுத்தும் விவகாரங்கள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது.
அண்டை நாடுகளான சீனாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பண்பாடு குறிப்பிட்ட அளவில் ஒத்திருக்கின்றது. தென்கொரியாவின் பொது மக்கள் திபெத்தை உணரவும் திபெத் குறித்த முழுமையான அறிவை அதிகரிக்கவும் இந்தப் பரிமாற்றப் பயணமானது உதவிடும் என்று சீனப் பரிமாற்றக் குழுத் தலைவர் வாங் யான்ட்சோங் நம்பிக்கை தெரிவித்தார்.